சென்னை,
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி :
தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார்.
இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மேலும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களையும் ஜோதிகா வழங்கி உள்ளார்.
ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.