""பிக்பாஸில் நான் பங்கேற்கவில்லை""என்று கூறிய பிரபலம்!! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!!
தமிழ் நாட்டு ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4, மிகப் பெரிய ஓபனிங் தந்துள்ளது.
தமிழில் 4வது சீசனுக்கான புரொமோ சமீபத்தில் வெளியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி
எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதனையடுத்து ரசிகர்கள் தேதிக்காக தான் காத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் டிக்டாக் புகழ் இலக்கியா பங்கேற்க போவதாக தகவல் வெளியாகின.
ஆனால் டிக்டாக் புகழ் இலக்கியா இதனை மறுத்துள்ளார், மேலும் இந்த செய்தி வெறும்
வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும்
ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது