இந்த ஊரில் இறந்தால் மட்டும் மறுபிறப்பே கிடையாதாம்... சிவனே காதில் வந்து நமசிவாய சொல்லி முக்தி தருகிறாராம்...

45 Views
Editor: 0

கோயம்புத்தூர் அருகே உள்ள பட்டீஸ்வரம் என்னும் சிவன் உறையும் ஊரில் உங்களால் கொஞ்சம் நினைத்தே பார்க்க முடியாத ஐந்து அதிசயங்கள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் நடக்கிறது. .

கோயம்புத்தூர் அருகே உள்ள பட்டீஸ்வரம் என்னும் சிவன் உறையும் ஊரில் உங்களால் கொஞ்சம் நினைத்தே பார்க்க முடியாத ஐந்து அதிசயங்கள் பாரபட்சமின்றி எல்லோருக்கும் நடக்கிறது. அவை என்னென்ன என்று விளக்கமாகப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

​உண்மையான அதிசயங்கள்

samayam tamil

உலகில் கடவுளின் தஜருவிளையாடல்கள், எல்லா கடவுள்களும் நிகழ்த்தும் அற்புதங்கள் என நிறைய விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். புராணங்களில் படித்திருப்போம். ஆனால் நம்முடைய கண் முன்னாலே நம்முடைய தமிழ்நாட்டில் நாள் தோறும் நடந்து கொண்டிருக்கும் அதிசயங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலே இருக்கிறோம். அதிலும் ஒரே ஊரில் ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து அபூர்வ அதிசயங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. அதைக் கேட்டால் உங்களால் நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது. அதில் சில விஷயங்களை சிவபெருமானே நேரில் வந்து நிகழ்த்துவதாக நம்பப்படுகிறது. அவை என்னென்ன என்று இங்கு நீங்களும் படித்து வியப்பில் ஆழ்ந்து ஆனந்தமடையுங்கள்.

​பேரூர் பட்டீஸ்வரம்

samayam tamil

கோயம்புத்தூருக்கு அருகில் வெறும் ஆறே கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பேரூர். இந்த பேரூரில் பெரிய சிவன் கோவில் ஒன்று உண்டு. அந்த கோவிலின் பெயர் பட்டீஸ்வரர் கோவில். அதனால் இந்த ஊரும் பட்டீஸ்வரம் என்ற அழைப்பதே பிரபலமாகிப் போனது. இது தேவாரத்தில் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. இங்குள்ள சிவன் அதீத ஆற்றல் கொண்டவராக அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் பாரபட்சமே இன்றி மறு பிறப்பில்லாத முக்தியை வழங்குகிறாராம். அதுமட்டுமல்ல, இந்த ஊரில் இன்னும் 5 அதிசயங்கள் நடக்கின்றன. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

​கல்லாகும் எலும்புகள்

samayam tamil

அந்த ஊரில் இறந்த போகின்றவர்களின் உடல் எரிக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்ட பின், மற்ற எல்லா ஊர்களைப் போலவும் எலும்புத் துண்டுகளை எடுத்துக் கொண்டு சென்று, அவர்கள் முக்தி அடைய வேண்டும் என்பதற்காக ஆற்றில் விடுவார்களாம். அப்படி விடப்படுகிற எலும்புத் துண்டுகள் என்ன ஆகும் தெரியுமா?... ஒரு சில வாரங்களுக்கு உள்ளாகவே இந்த எலும்புகள் யாவும் கல்லாக மாறிவிடுமாம். இந்த அதிசயம் தொடர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

​வாடாத இறக்காத பனை

samayam tamil

பொதுவாக பனை மரம் எவ்வளவு காலம் வரை இருக்கும்? அதிகபட்சம் 100 முதல் 120 வரை இருக்கும். ஆனால் இந்த பட்டீஸ்வரம் கோவிலில் உள்ள பனை மரம் பல நூறு ஆண்டுகளாக ஒரு பனை மரம் இருக்கிறதாம். அது இளமையாகவே இருக்கிறதாம். கடும் கோடையில் கூட சிறிதளவு கூடு இந்த பனை மரம் வாடிப் போகாதாம்.

​முளைக்காத புளிய மரம்

samayam tamil

பனை மரம் மட்டும் இல்லைங்க. இந்த பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரு பெரிய புளிய மரமும் இருக்கிறதாம். அதில் சீசன் சமயங்களில் புளியம்பழங்கள் காய்த்துத் தொங்குமாம். அதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? இருங்க சொல்றேன். அந்த குறிப்பிட்ட புளிய மரத்தில் காய்க்கின்ற பழங்களில் உள்ள விதைகளை முளைக்க வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் முளைக்காதாம். இந்த புளிய மரம் கூட? அந்த கோவிலில் உள்ள சிவனின் முக்தி பெற்று மறுபிறப்பில்லாமல் இருக்கிறதாக ஐதீகம் உண்டு.

​புழுக்காத சாணம்

samayam tamil

பட்டீஸ்வரம் கோவிலைச் சுற்றியுள்ள மக்களுடைய ஆடு, மாடுகள் கோவில் வளாகத்துக்குள் வந்து மேய்ந்து கொண்டிருக்குமாம். அப்படி மேய்ந்து கொண்டிருக்கையில், அவை சாணங்கள் போட்டால், அவை எத்தனை நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்குமாம். குாடை காலத்தில் அவை காய்ந்து போகுமே தவிர மழை மற்றும் குளிர் சமயங்களில் அல்லது ஈரமாக இருக்கும் சமயங்களில் அந்த சாணங்கள் புழுத்துப் போகவே போகாதாம். அந்த சாணங்களில் புழு உற்பத்தியே ஆகாதாம்.

​வலது காது தூக்கி இறத்தல்

samayam tamil

மேலே சொன்ன 4 அதிசயங்களைக் கூடு சொன்னால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனால் இந்த ஐந்தாவது அதிசயத்தைக் கேட்டால் உங்க்ள உடலெல்லாம் நிச்சயம் சிலிர்த்துப் போகும். இந்த பேரூரில் உள்ள யிரினங்கள் மற்றும் மனிதர்கள் யார் இறந்து போனாலும் அவர்களுடைய வலது காது தூக்கியபடி இருக்குமாம். இறப்பவர்கள் எல்லோருக்கும் எப்படி ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் காலங்காலமாக இந்த ஊரில் இறப்பவர்கள் எல்லோருடைய வலது காதும் தூக்கிய படி தான் இறந்து போவார்களாம்.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இறந்து போகின்றவர்கள் அனைவரும் மறுபிறப்பில்லா முக்தியை அடைவார்களாம். ஏனென்றால், இறந்து போகின்றவர்களின் காதில் சிவபெருமானே நேரடியாக வந்து, நமசிவாய என்று சொல்லி மறுபிறப்பு இல்லா முக்தியை வழங்குகிறாராம்.

இத்தனை அதிசயங்களையும் தினந்தோறும் நடத்தும் இடம் தான் பேரூர் பட்டீஸ்வரர் கோவில்.

 

கோவில்கள்