ஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .

35 Views
Editor: 0

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். .

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமியிடம் ஆதரவு கேட்டார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தருவதற்கு ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்பதாக குமாரசாமி கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 கோடி தாருங்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன் என்று குமாரசாமி கூறியுள்ளார். இதற்கிடையே விஜிகவுடா பாட்டீல், குமாரசாமியுடன் நடைபெற்ற உரையால் தொடர்பாக 35 நமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்களது பேச்சு வீடியோவாக உள்ளூர் தொலைக் காட்சியில் வெளியானது இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தொலைபேசி உரையாடலில் இடம் பெற்று இருப்பது தன்னுடைய குரல்தான் என்பதை ஒப்புக் கொண்டார்.  மேலும், தான் ஒன்றும் பெரிய குற்றத்தை செய்யவில்லை என்று கூறியுள்ளார். மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சூழ்நிலையில் மாறிவிட்டது. எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தர மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பணம் கேட்கவில்லை. காங்கிரஸ் பாரதீய ஜனதாவும்  இதனையே செய்கின்றன. இதுதொடர்பாக விவாதம் நடத்த தயராக இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலில் ஆதரவு அளிக்க பேரம் பேசுவது நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடப்பதுதான். தற்போதைய அரசியல் நிலவரத்தையே நான் எடுத்துக் கூறினேன். ஆனால், பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.