இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியது:-
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,94,374 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:
பரிசோதனை:-
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,25,689 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு செய்யப்பட்டன. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை எண்ணிக்கை, 1,93,58,659 ஆக அதிகரித்துள்ளது.