60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
முன்பதிவு மற்றும் விபரங்களை tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிப்பு.
குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி உண்டு.