கொரோனா தடுப்பு மருந்து தயார்;
விரைவில் விநியோகம் - அதிபர் புடின்

47 Views
Editor: 0

Corona Vaccine | கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து தயார்; விரைவில் விநியோகம் - அதிபர் புடின்

 

Corona Vaccine | கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. தற்போது 20-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் உள்ளன.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளதாகவும், தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட பரிசோதனையில், தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரியவந்ததாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது.

கடந்த வாரம், கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்திருந்தார். வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும், முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்தார்.

எனினும், அறிவியல் மற்றும் பாதுகாப்பை புறந்தள்ளிவிட்டு இதை கவுரவ பிரச்னையாக பார்க்கும் ரஷ்யா அவசரகதியில் தடுப்பூசியை அறிவிப்பதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். தனது மகள் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளதாக ரஷிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருந்தின் பெயர் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்