ஆறு அடி மனிதரை சுருண்டு விழ வைத்த பூனை..! நொடியில் நடந்த விபரீதம்...

49 Views
Editor: 0

சீனாவில் தலையில் பூனை விழுந்து, ஒருவர் சுயநினைவை இழந்த சம்பவம் நடந்துள்ளது..

ஆறு அடி மனிதரை சுருண்டு விழ வைத்த பூனை..! நொடியில் நடந்த விபரீதம்...

 

சீனாவில் தலையில் பூனை விழுந்து, ஒருவர் சுயநினைவை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

 

2020 இல் இதுவரை கண்டிராத வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெரிய இழப்புகள் கூட சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது. இவ்வளவுதான் மனிதனின் வாழ்க்கை, அனைத்துக்கும் தயாராக இருக்கவேண்டு என்ற எண்ணம் நிறையே பேரிடம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கேற்றவாறே இந்த நிகழ்வும் நடந்துள்ளது. எங்கோயோ கீழே விழும் ஒரு பூனை, நடந்து செல்லும் நம் தலையின் மீது சரியாக வந்து விழுந்தால் அதை எப்படி ஒருவரால் சாதாரண விபத்தாக எடுத்துக்கொள்ள முடியும்?

வடகிழக்கு சீன மாகாணமான ஹெய்லோங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகரில் ஏற்பட்ட சம்பவம்தான் இது. காவோ ஃபெங்குவா என்ற முதியவர் தனது வளர்ப்பு நாயுடன் நடை பெயர்ச்சி செய்துகொண்டு அவ்வழியே செல்கிறார்.

அப்போது, எங்கோ உயரத்தில் இருந்து விழும் பூனை ஒன்று அவரது தலையின் மீது விழுந்து அங்கிருந்து ஓடுகிறது. அதனால் சுயநினைவை இழந்த அந்த முதியவர் தரையில் விழுந்தபடி கிடக்க, அவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த நாய் நடந்தவற்றை அறிய முயற்சிக்கிறது. பின்னர், பூனைதான் தனது முதலாளியின் நிலைமைக்கு காரணம் என்பதை அறிந்துகொண்டு, அந்த பூனையிடம் சென்று குரைக்கிறது.

இந்த நிகழ்வுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி பின்னர் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து அந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இரண்டு வாரங்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் சீன உள்ளூர் மீடியாக்கள் கூறுகின்றன.மேலும், அந்த பூனை அங்கிருந்த அபார்ட்மெண்டில் இருந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
 

 

உலகச்செய்திகள்