வருவாய்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன்…! ஹைகோர்ட் அதிரடி

73 Views
Editor: 0

மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது..

மதுரை: தந்தை, மகன் உயிரிழப்பில் முழுமையான ஒத்துழைப்பு தராததால் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை தாமாக முன் வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போதிய தரவுகளை தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில், விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த  காவல்நிலையத்தை வருவாய்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அங்குள்ள பதிவேடுகளில் தகவல்களை திரட்டுவதுடன், தடவியல் நிபுணர்களை கொண்டு காவல்நிலையத்தில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: சாத்தான்குளம், சாத்தான்குளம் சம்பவம், டிரெண்டிங், மதுரை உயர்நீதிமன்றம்
 

மாநிலச்செய்திகள்