’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

50 Views
Editor: 0

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை..

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் - தமிழக அரசு

* புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.

* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடையில் கவிழ்ந்தது.

* சென்னை மீனம்பாக்கம், கிண்டி, பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

* கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 

மாநிலச்செய்திகள்