ஆஸ்கார் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் சமீபத்தில் இந்தி திரையுலகில் நடத்தப்படும் அரசியல் குறித்து சமீபத்தில் தனது கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
தனியார் ரேடியோ சேணலின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த ரகுமான், பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் பிடிஐ நிறுவனத்திற்கு ஆஸ்கார் நாயகன் அளித்த பேட்டியில், “பாலிவுட்டில் எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என ஒரு கூட்டமே எனக்கு எதிராக வேலை பார்க்கிறது. என்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அந்தக் கூட்டம் புரளிகளைப் பரப்பி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.