நியாயவிலைக் கடைகளில் மேம்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளைக் கொண்டு, உணவுப் பொருட்களை வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டு முறையை மேம்படுத்தி குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமே பொருட்களை வாங்கும் விதமாக அட்டைதாரர் கைரேகை பதியும் பயோமெட்ரிக் முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருவோரின் கைரேகை பதிவைப் பயன்படுத்தி பொருட்களை வழங்கிடவும், கைரேகைப் பதிவு தோல்வியடைந்தால், மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பொருட்களை வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.