ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி

41 Views
Editor: 0

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்..

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி:-

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

புதிதாக வாங்கப்பட்ட கிரேனை பரிசோதனை செய்த போது சரிந்துவிழுந்தது. தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உயரிழ சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட போலீஸ் ஆர்கே மீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

latest tamil news

விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர், கப்பல் கட்டும் தளம் முன்னர் குவிந்தனர். தங்களை உள்ளேவிட போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உள்ளே இருக்கும், தங்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என தெரிவித்தனர்.

 

 

மாநிலச்செய்திகள்