என்ன செய்யலாம்..? புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை:
சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும்,எதிர்ப்பும் இருந்து வருகிறது.
தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பான திமுகவும், அதன் கூட்டணியினரும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரினர்.
இந் நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், செங்கோட்டையன் பங்கேற்றனர். அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.
புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள், எதிர்க்கட்சிகள் கடிதம், பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்புவும் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.