தமிழகத்தில் ஒரே நாளில் 6,488 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

37 Views
Editor: 0

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது..

தமிழகத்தில் ஒரே நாளில் 6,488 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர் :

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,07) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.27 லட்சத்தை கடந்தது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 24 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 126 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-65) மூலமாக, இன்று மட்டும் 67,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 30 லட்சத்து 88 ஆயிரத்து 066 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
latest tamil news

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,445 பேர் ஆண்கள், 2,435 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,72,334 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,12,663 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 575 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,759 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 053 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 184 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 35 ஆயிரத்து 787 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

மாநிலச்செய்திகள்