10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்? அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

44 Views
Editor: 0

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது ஏன்? அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்:

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 5,248 மாணவர்களுக்கு வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட முடிவில் தேர்வு எழுதிய  9,39,829 பேரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், 10 வகுப்பு தேர்வை எழுத 9,45,007 விண்ணப்பித்திருந்தனர்.

இதைத்தொடந்து, மீதமுள்ள 5,248 பேரின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகாததால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், 5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாதது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் விளக்கமளித்துள்ளது. அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 5,248 மாணவர்கள் விடுப்பட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை, விடுப்பட்டவர்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்யவில்லை  என தெரிவித்துள்ளது. அதாவது, காலாண்டு, அரையாண்டு, தேர்வு எழுதாத பள்ளிக்கு முழுமையாக வராத 4,359 பேர் தேர்ச்சி பெறவில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியைவிட்டு நின்ற மாணவர்கள் 658 பேரும் தேர்ச்சியில்லை, பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தபின் 231 மாணவர்கள் உயிழந்துள்ளனர் அதனால் தேர்ச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலச்செய்திகள்