சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

43 Views
Editor: 0

சென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு திறந்து வைத்தார்..

சென்னை – போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டம் : நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

 

சென்னை மற்றும் போர்ட் பிளேரை இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு திறந்து வைத்தார்.

சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். சுமார் 2,300 கி.மீ. நீர்மூழ்கி கடல்வழியே கொண்டு செல்லப்படும் இந்தக் கடல்வழி கண்ணாடி இழை திட்டம், மொத்தம் ரூ.1,224 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபாருடனான இணைப்பை அதிகரிக்கும் இந்த திட்டத்தை, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ” இந்த கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தின் மூலம் அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும். இதனால், அந்தமானில் சுற்றுலாத் துறை மேம்படும்,” எனக் கூறினார்.

chennai - port blair - updatenews360

சென்னை – அந்தமான் போர்ட் பிளேரிடையே கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நிகராக அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான தொலைதொடர்பு சேவைகளை வழங்க உதவும்.

இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு நிகராக அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான தொலைதொடர்பு சேவைகளை வழங்க முடியும். மேலும், இந்த இணைப்பின் மூலம், தற்போதையதை விட 4 மடங்குகள் அதிகமாக, அதாவது, வினாடிக்கு 400 ஜிபி வரையிலான தரவு வேகத்தை பெற முடியும்.

மாநிலச்செய்திகள்