சென்னை:
சுதந்திர தினம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் முழுமையாக மீண்டு மீண்டும் வெற்றி நடைபோடும்.