சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு...

46 Views
Editor: 0

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது..

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு:

 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

 

 தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,33,173 ஆக உள்ளது. 13,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம் பின்வருமாறு:- 

 

கோடம்பாக்கம் - 1,577 பேர்

 

அண்ணா நகர் - 1,621 பேர்

 

தேனாம்பேட்டை - 995 பேர்

 

தண்டையார்பேட்டை - 961 பேர்

 

ராயபுரம் - 907 பேர்

 

அடையாறு- 1,327 பேர்

 

திரு.வி.க. நகர்- 1,032 பேர்

 

வளசரவாக்கம்- 1,051 பேர்

 

அம்பத்தூர்- 1,087 பேர்

 

திருவொற்றியூர்- 276 பேர்

 

மாதவரம்- 547 பேர்

 

ஆலந்தூர்- 763 பேர்

 

பெருங்குடி- 591 பேர்

 

சோழிங்கநல்லூர்- 576 பேர்

 

மணலியில் 157 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மாநிலச்செய்திகள்