ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? : இன்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு:
சென்னை: தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (ஆக.31) முடிவடைகிறது. வரும் செப்டம்பரிலும் ஊரடங்கை நீடிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அனுமதிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இ.பி.எஸ், நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் செப்டம்பரிலும் ஊரடங்கை நீடித்து நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை தமிழக அரசு கருத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிடுகிறார்.