சென்னை,
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தகவலின்படி,
5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். www.tndatu.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.