அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

46 Views
Editor: 0

டெல்லி: அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது..

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்யக்கூடிய சூழலானது மலை  கிராமங்களில் இருந்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய  அணைகள் முழுவதுமாக நிரம்பி வருகின்றன.

தொடர்ந்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த 2 வாரங்களாக தொய்வடைந்து இருப்பினும் கடந்த 3 நாட்களாக நாட்டின் பல்வேறு  பகுதிகளில்  நல்ல மழையை கொடுத்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, மும்பை போன்ற நகரங்களில் பெரியளவில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்  அறிவிப்பில், வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மலை மாவட்டங்களில் அதீத கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொங்கன், கோவா, மும்பை, மத்திய மஹாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் 60 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. 4 முதல் 5 நாட்களுக்கு இந்த மழை தொடரும் பட்சத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் சூழலில் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலச்செய்திகள்