ஆந்திராவில் 10 நாளில் மூன்றிலிருந்து 4 லட்சமானது பாதிப்பு:

அமராவதி: ஆந்திராவில் நேற்று (ஆக., 28) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு, நான்கு லட்சமானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி:

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி நீட்டிப்பு:

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து தொடங்குமா..? செப்டம்பர் முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்:

செப்டம்பர் முதல் தளர்த்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பஸ்கள் எப்போது ஓடும்?- மக்கள் எதிர்பார்ப்பு...

தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்த கல்வித்துறை அமைச்சர்...

மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்தார்.

திறக்கபடுமா கோயம்பேடு சந்தை...? துணை முதல்வர் நேரில் ஆய்வு

கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை